உக்ரைன் போர் குறித்து நாடாளுமன்ற அவைகளில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.
ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதையும் படிக்க | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது
இதற்கிடையே உக்ரைனில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்க ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றன. இதன்மூலம், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நாளை விரிவான அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கல் செய்யவுள்ளார்.