/

தில்லியில் குடியரசுத் தலைவருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

உ.பி. பாஜக முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

News image
Updated On :14 மார்ச் 2022, 12:12 pm IST

உ.பி. பாஜக முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. அமோக வெற்றி பெற்றதையடுத்து உ.பி. முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத், நேற்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். உ.பி.யில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக நேற்று காலை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். 

இதன் தொடர்ச்சியாக யோகி ஆதித்யநாத், இன்று தில்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

Story image

இன்று காலை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் யோகி ஆதித்யநாத் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.