‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மணிப்பூரில் பாஜக அரசுடன் இணைய தயார்: மேகாலயா முதல்வர்

மேகாலயா முதல்வரும், தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவருமான கான்ராட் கே. சங்மா இன்று, மணிப்பூரில் பாஜக

News image

மேகாலய முதல்வர் கான்ராட் கே. சங்மா.

Updated On :16 மார்ச் 2022, 11:04 am

DIN

ஷில்லாங்/இம்பால்: மேகாலயா முதல்வரும், தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவருமான கான்ராட் கே. சங்மா இன்று, மணிப்பூரில் பாஜக தலைமையிலான ஆட்சியில் இணைய தனது கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மணிப்பூரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) 7 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டு, இருவரும் ஒருவரையொருவர் பல்வேறு விஷயங்களில் குற்றம் சாட்டினர்.

என்பிபி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இணைய தயாராக இருப்பதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை ஆதரிப்பதாகவும், மேகாலயாவில் இணைந்து செயல்படுவதாகவும் சங்மா கூறினார்.

மணிப்பூர் அரசுடன் இணைய பாஜக தங்களை அழைத்தால், சேரத் தயாராக இருக்கிறோம். அவர்கள் அழைக்கவில்லை என்றால், இதைப்பற்றி  பின்னர் ஆராய்வோம் என்று என்.பி.பி. தேசியத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.