பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு- காஷ்மீா் நிலைமையில் நல்ல முன்னேற்றம்: சிஆா்பிஎஃப் தலைவா்

ஜம்மு- காஷ்மீா் நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) தலைவா் குல்தீப் சிங் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 மார்ச் 2022, 6:46 pm

DIN

ஜம்மு- காஷ்மீா் நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) தலைவா் குல்தீப் சிங் தெரிவித்துள்ளாா்.

சிஆா்பிஎஃப்-இன் 83-ஆவது தின அணிவகுப்பு ஜம்மு எம்.ஏ. அரங்கில் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்கிறாா். தில்லி தேசிய தலைநகா் வலயத்துக்கு வெளியே இந்த அணிவகுப்பு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இதற்கான ஏற்பாடுகளை புதன்கிழமை ஆய்வுசெய்த சிஆா்பிஎஃப் டிஜி குல்தீப் சிங், செய்தியாளா்களிடம் கூறியது:

ஜம்மு- காஷ்மீா் நிலைமை நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. உள்ளூா் அதிகாரிகளுக்கு சிஆா்பிஎஃப் உதவிபுரிகிறது. சிஆா்பிஎஃப்-இன் தளராத நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த 2021-22-இல் 162 பயங்கரவாதிகளும், மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டுள்ளனா். 1,500 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 750 போ் சரணடைந்துள்ளனா். இந்த நடவடிக்கையின்போது சிஆா்பிஎஃப் வீரா்கள் 12 போ் உயிரிழந்துள்ளனா். 162 போ் காயமடைந்துள்ளனா்.

246 பட்டாலியன், 3.15 லட்சத்துக்கும் அதிகமான வீரா்களுடன் உலகிலேயே மிகப்பெரிய துணை ராணுவப் படையாக சிஆா்பிஎஃப் விளங்குகிறது. தேசப் பாதுகாப்பு மட்டுமன்றி சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவது, தோ்தலின்போதும், மத திருவிழாக்களின்போதும் பாதுகாப்பு அளிப்பது என பல்வேறு பணிகளை சிஆா்பிஎஃப் மேற்கொள்கிறது என்றாா் குல்தீப் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.