கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பஞ்சாபில் கார் மோதி விபத்து: 2 பேர் பலி

பக்வாராவின் புறநகரில் உள்ள பக்வாரா-ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :18 மார்ச் 2022, 7:02 am

பக்வாரா: பக்வாராவின் புறநகரில் உள்ள பக்வாரா-ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த ஓட்டுநர் அயூப் (40) மற்றும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள லேஹல் கலான் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் பிரேம் குமார் (32) விபத்தில் பலியானதாக சதர் காவல் நிலைய அலுவலர் ஜதீந்தர் குமார் தெரிவித்தார்.

சாலையோரத்தில் வாகனத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் மீது கார் மோதியதில் இறந்ததாக காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.

நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் லாரியின் கிளீனர் பலத்த காயமடைந்தார்.

இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்று காவல் நிலைய அலுவலர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.