அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் விபத்து: வீரர் பலி
அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் நீர்நிலையில் கவிழ்ந்ததில் வீரர் ஒருவர் பலியானார்.
அசாம் மாநிலம், தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாடை இழந்து ஜௌடாங்கா பகுதியில் உள்ள 20-30 அடி ஆழமான நீர்நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.
மற்றொருவர் மாயமானார். 3 பேர் நீந்தி கரைக்குத் திரும்பினர். தற்போது வரை ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாயமானவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரிகள், மாவட்ட காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


