மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் விபத்து: வீரர் பலி

அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் விபத்து: வீரர் பலிஅசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் நீர்நிலையில் கவிழ்ந்ததில் வீரர் ஒருவர் பலியானார். 

News image
Updated On :18 மார்ச் 2022, 4:20 pm

அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் விபத்து: வீரர் பலி
அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் நீர்நிலையில் கவிழ்ந்ததில் வீரர் ஒருவர் பலியானார். 

அசாம் மாநிலம், தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாடை இழந்து ஜௌடாங்கா பகுதியில் உள்ள 20-30 அடி ஆழமான நீர்நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த சம்பவத்தில் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.

மற்றொருவர் மாயமானார். 3 பேர் நீந்தி கரைக்குத் திரும்பினர். தற்போது வரை ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாயமானவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார். 

இதற்கிடையில், எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரிகள், மாவட்ட காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.