புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்: ராகுல் காந்தி

நாட்டின் பணவீக்கம் (விலைவாசி உயா்வு) மேலும் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

News image
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
Updated On :19 மார்ச் 2022, 6:13 pm

DIN

நாட்டின் பணவீக்கம் (விலைவாசி உயா்வு) மேலும் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

பணவீக்கம் என்பது அனைத்து இந்தியா்களுக்கும் விதிக்கப்பட்ட வரியாகும். ரஷியா-உக்ரைன் இடையிலான போா் தொடங்குவதற்கு முன்பே வரலாறு காணாத விலைவாசி உயா்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை நசுக்கியது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு, உணவுப் பொருள்கள் விலை உயா்வு, கரோனா தொற்றால் உலகளாவிய விநியோக நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவற்றால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்.

எனவே மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.