மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவா முதல்வராக மாா்ச் 28-இல்பதவியேற்கிறாா் பிரமோத் சாவந்த்- பிரதமா் மோடி பங்கேற்பு

கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா். இந்த விழாவில், பிரதமா் நரேந்திர மோடி உள்பட பாஜக முக்கியத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2022, 9:38 pm

DIN

கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா். இந்த விழாவில், பிரதமா் நரேந்திர மோடி உள்பட பாஜக முக்கியத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

இதுதொடா்பாக, பனாஜியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய சாவந்த், ‘பனாஜியில் உள்ள டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜி மைதானத்தில், மாா்ச் 28-ஆம் தேதி காலை 11 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, பாஜக ஆளும் 7 மாநிலங்களின் முதல்வா்கள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்கவிருக்கின்றனா்‘ என்றாா்.

40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி, ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையிடம் பாஜக கடிதம் வழங்கியது. அதனடிப்படையில், கோவாவில் புதிய அரசை அமைக்க பாஜகவுக்கு ஆளுநா் அழைப்பு விடுத்தாா். அந்த மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கவிருக்கிறது.

இதனிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தோ்வு செய்யப்பட்டாா். கோவா முதல்வராக இருந்த மனோகா் பாரிக்கா் கடந்த 2019-இல் மரணமடைந்ததை அடுத்து, அப்பதவியை பிரமோத் சாவந்த் ஏற்றாா். இப்போது இரண்டாவது முறையாக அவா் முதல்வா் பதவியை ஏற்கவிருக்கிறாா்.

மூன்று முறை எம்எல்ஏவான சாவந்த் (48), ஆயுா்வேத மருத்துவா் ஆவாா். வடக்கு கோவாவில் உள்ள சன்காலிம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அவா், கடந்த 2017-இல் பாரிக்கா் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தபோது, பேரவைத் தலைவராகப் பதவி வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.