கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவா முதல்வராக மாா்ச் 28-இல்பதவியேற்கிறாா் பிரமோத் சாவந்த்- பிரதமா் மோடி பங்கேற்பு

கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா். இந்த விழாவில், பிரதமா் நரேந்திர மோடி உள்பட பாஜக முக்கியத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2022, 9:38 pm

கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா். இந்த விழாவில், பிரதமா் நரேந்திர மோடி உள்பட பாஜக முக்கியத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

இதுதொடா்பாக, பனாஜியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய சாவந்த், ‘பனாஜியில் உள்ள டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜி மைதானத்தில், மாா்ச் 28-ஆம் தேதி காலை 11 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, பாஜக ஆளும் 7 மாநிலங்களின் முதல்வா்கள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்கவிருக்கின்றனா்‘ என்றாா்.

40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி, ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையிடம் பாஜக கடிதம் வழங்கியது. அதனடிப்படையில், கோவாவில் புதிய அரசை அமைக்க பாஜகவுக்கு ஆளுநா் அழைப்பு விடுத்தாா். அந்த மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கவிருக்கிறது.

இதனிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தோ்வு செய்யப்பட்டாா். கோவா முதல்வராக இருந்த மனோகா் பாரிக்கா் கடந்த 2019-இல் மரணமடைந்ததை அடுத்து, அப்பதவியை பிரமோத் சாவந்த் ஏற்றாா். இப்போது இரண்டாவது முறையாக அவா் முதல்வா் பதவியை ஏற்கவிருக்கிறாா்.

மூன்று முறை எம்எல்ஏவான சாவந்த் (48), ஆயுா்வேத மருத்துவா் ஆவாா். வடக்கு கோவாவில் உள்ள சன்காலிம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அவா், கடந்த 2017-இல் பாரிக்கா் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தபோது, பேரவைத் தலைவராகப் பதவி வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.