விலை உயர்வை கண்டித்து அமளி: மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு

விலை உயர்வை கண்டித்து அமளி: மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
Published on

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி இரு அவைகளிலும் நடைபெற்று வருகின்றன. இன்று காலை கூடிய மாநிலங்களவையில் கேள்வி நேரம் நடைபெற்று வந்தன.

இதற்கிடையே, அவைத் தலைவரின் இருக்கைக்கு முன்பு வந்த எதிர்க்கட்சியினர் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவையின் விலை உயர்வை கண்டித்து பாதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பகல் 12 மணிவரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com