உ.பி.யில் கோர விபத்து: 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலி; ஒருவர் படுகாயம்

உத்தர பிரதேசத்தில் மலிஹாபாத் என்ற பகுதியில், டிரக் மீது கார் மோதிய விபத்தில் 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலியாகனிர். ஒருவர் படுகாயமடைந்தார்.
உ.பி.யில் கோர விபத்து: 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலி; ஒருவர் படுகாயம்
உ.பி.யில் கோர விபத்து: 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலி; ஒருவர் படுகாயம்
Published on
Updated on
1 min read


லக்னௌ: உத்தர பிரதேசத்தில் மலிஹாபாத் என்ற பகுதியில், டிரக் மீது கார் மோதிய விபத்தில் 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலியாகனிர். ஒருவர் படுகாயமடைந்தார்.

பலியான மருத்துவ மாணவர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகாயமடைந்த மாணவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நால்வரும் லக்னௌவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் ஹோலி விடுமுறையைக் கொண்டாட ராம்பூர் சென்றுவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நேரிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com