உ.பி.யில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை
உ.த்தரப் பிரதேசத்தில், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பாஜக தலைவர் கௌரவ் ஜெய்ஸ்வால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உ.த்தரப் பிரதேசத்தில், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பாஜக தலைவர் கௌரவ் ஜெய்ஸ்வால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் செயலாளரும், வழக்குரைஞருமான கௌரவ் ஜெய்ஸ்வால் (35) அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தெரிவித்ததாவது,
ஜெய்ஸ்வால் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த குற்றம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
மகாராஜ்கஞ்ச் நகராட்சியின் தலைவர் கிருஷ்ண கோபால் ஜெய்ஸ்வாலின் மருமகனாக இருந்த ஜெய்ஸ்வால், புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தீவிர பாஜக செயலாளராகவும், கட்சியின் தூய்மை பிரசாரத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.
அவரது மரணம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யுமாறு பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்தாலும், சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை சந்தைகள் மூடப்பட்டன.
சியுராஹா கிராசிங் அருகே உள்ள ஒரு பிரியாணி கடையில் ஜெய்ஸ்வால் அமர்ந்திருந்தபோது இந்த குற்றம் நடந்துள்ளது. அவர் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...