டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ம.பி.யில் 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்

மத்தியப் பிரதேசத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:46 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

மாநிலத் தலைநகர் போபாலின் அரேரா காலனியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தடுப்பூசி இயக்கத்தை மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தொடங்கிவைத்தார். அங்குத் தகுதியுள்ள சிறுமிக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

வைரஸ் தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போட முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தார். நோய்த்தொற்று மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி அவசியம் என்றார். 

இதுவரை நாட்டில் 181 கோடி கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் கரோனா மூன்றாம் அலை அந்த அளவுக்கு பாதிக்கவில்லை. மத்தியப் பிரதேசத்தில் இதுவரை 11.44 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.