உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ம.பி.யில் ஒரேநாளில் 3.6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை

மத்தியப் பிரதேசத்தில் ஒரேநாளில் 12-14 வயதுக்குட்பட்ட 3.67 லட்சம் சிறார்களுக்கு கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:16 pm IST

மத்தியப் பிரதேசத்தில் ஒரேநாளில் 12-14 வயதுக்குட்பட்ட 3.67 லட்சம் சிறார்களுக்கு கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் சந்தோஷ் சுக்லா கூறுகையில், 

நாட்டிலேயே இது ஒரு சாதனை என்று கூறினார். 12-14 வயதுப் பிரிவினருக்கான தடுப்பூசி இயக்கத்தைப் புதன்கிழமை தொடங்கிவைத்த முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மாநில மக்கள் மீண்டும் ஒரு சாதனையைப் படைக்கப் பொதுமக்கள் பங்கேற்பதற்கான சிறந்த உதாரணத்தைக் காட்டியுள்ளனர் என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த சிறார்களுக்கும், பெற்றோர்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய நாளிலேயே 12-14 வயதிற்குட்பட்ட 3,37,883 கோர்பெவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மத்தியப் பிரதேசத்தில் ஒரேநாளில் அதிகளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.