இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

செலவினங்களைக் குறைத்த சுகாதாரக் காப்பீட்டு திட்டம்: மத்திய அரசு

ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா(AB-PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.37,185 கோடி மதிப்பிலான

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:47 am

DIN

புதுதில்லி: ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா(AB-PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.37,185 கோடி மதிப்பிலான மருத்துவச் சேவைகளுக்கான சுகாதாரக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டம் செப்டம்பர் 2018 இல் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வரை ரூ.37,185 கோடி மருத்துவச் சேவைகளுக்கான காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதார சேவைகளை பயனாளிகள் தாங்களாகவே பயன்படுத்திக் கொண்டால், இத்திட்டத்தின் கீழ் செலவழிக்கப்பட்டதை விட 1.5-2 மடங்கு அதிகமாக செலவழித்திருக்கும் என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்தார்.

திரும்பப்பெற இயலாத செலவினங்களைக் குறைப்பதில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகப் செயல்பட்டுள்ளது என்று எழுத்துப்பூர்வமாக அமைச்சர் பதில் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.