
திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இலவச பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு சென்ற தேவஸ்தானத்திற்கு சொந்தமான இலவச பேருந்து இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட பேருந்து ஓட்டுநர் உடனடியாக கீழே இறங்கினார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். டீசல் கசிவு காரணமாக பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.