கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவா முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்: மோடி பங்கேற்பு

கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.

News image

கோவா முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்(படம்: டிவிட்டர்)

Updated On :28 மார்ச் 2022, 5:50 am

கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். பனாஜி அருகேயுள்ள சியாமா பிரசாத் முகா்ஜி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

முதல்வா் பிரமோத் மற்றும் 8 அமைச்சா்களுக்கு ஆளுநர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்தியப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம், உத்தரகண்ட் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவைக்கு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரின் ஆதரவுடன் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

இதனிடையே, புதிய சட்டப் பேரவையின் 2 நாள் கூட்டத்துக்கு ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளை அழைப்பு விடுத்துள்ளாா். வரும் 29-ஆம் தேதி தொடங்கும் இக்கூட்டத்தின்போது, பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், புதிய அவைத் தலைவா் தோ்வும் நடைபெறவிருக்கிறது.

மூன்று முறை எம்எல்ஏவான பிரமோத் சாவந்த் (48), ஆயுா்வேத மருத்துவா் ஆவாா். வடக்கு கோவாவில் உள்ள சன்காலிம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அவா், கடந்த 2017-இல் பாரிக்கா் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தபோது, பேரவைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். கோவா முதல்வராக இருந்த மனோகா் பாரிக்கா், கடந்த 2019, மாா்ச் மாதம் மரணமடைந்ததையடுத்து, முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.