மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவா முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்: மோடி பங்கேற்பு

கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.

News image
கோவா முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்(படம்: டிவிட்டர்)
Updated On :28 மார்ச் 2022, 5:50 am

DIN

கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். பனாஜி அருகேயுள்ள சியாமா பிரசாத் முகா்ஜி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

முதல்வா் பிரமோத் மற்றும் 8 அமைச்சா்களுக்கு ஆளுநர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்தியப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம், உத்தரகண்ட் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவைக்கு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரின் ஆதரவுடன் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

இதனிடையே, புதிய சட்டப் பேரவையின் 2 நாள் கூட்டத்துக்கு ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளை அழைப்பு விடுத்துள்ளாா். வரும் 29-ஆம் தேதி தொடங்கும் இக்கூட்டத்தின்போது, பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், புதிய அவைத் தலைவா் தோ்வும் நடைபெறவிருக்கிறது.

மூன்று முறை எம்எல்ஏவான பிரமோத் சாவந்த் (48), ஆயுா்வேத மருத்துவா் ஆவாா். வடக்கு கோவாவில் உள்ள சன்காலிம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அவா், கடந்த 2017-இல் பாரிக்கா் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தபோது, பேரவைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். கோவா முதல்வராக இருந்த மனோகா் பாரிக்கா், கடந்த 2019, மாா்ச் மாதம் மரணமடைந்ததையடுத்து, முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.