பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

குடியரசுத் தலைவருடன் நெதர்லாந்து முன்னாள் இந்திய தூதர் சந்திப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகின்ற ஏப்ரல் 4 -ஆம் தேதி நெதர்லாந்து பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவரை இந்தியாவுக்கான முன்னாள் நெதர்லாந்து தூதர் வேணு ராஜாமணி சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :31 மார்ச் 2022, 12:18 am

 நமது நிருபர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகின்ற ஏப்ரல் 4 -ஆம் தேதி நெதர்லாந்து பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவரை இந்தியாவுக்கான முன்னாள் நெதர்லாந்து தூதர் வேணு ராஜாமணி சந்தித்துப் பேசினார்.
 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏப்ரல் - 4 தேதி முதல் 3 நாள்கள் நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, நெதர்லாந்து அதிபரையும், பிரதமரையும் சந்திக்கிறார்.
 இதை முன்னிட்டு, நெதர்லாந்துக்கான முன்னாள் இந்திய தூதரும், கேரள அரசின் சிறப்பு அதிகாரியுமான வேணு ராஜாமணி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை திங்கள்கிழமை சந்தித்து தன்னுடைய நெதர்லாந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 2019 -ஆம் ஆண்டு நெதர்லாந்தின் மன்னர் வில்லியம் அலெக்சாண்டர், ராணி மேக்சிமா ஆகியோர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தனர். அந்தச் சமயத்தில் இந்தியாவுக்கான தூதராக வேணு ராஜாமணி இருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.