பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

வெளியுறவுத் துறைச் செயலராக வினய் குவாத்ரா பொறுப்பேற்பு

​நாட்டின் வெளியுறவுத் துறை புதிய செயலராக மூத்த அதிகாரி வினய் மோகன் குவாத்ரா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டதாக மத்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார

News image
படம்: ட்விட்டர்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:07 am

DIN


நாட்டின் வெளியுறவுத் துறை புதிய செயலராக மூத்த அதிகாரி வினய் மோகன் குவாத்ரா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டதாக மத்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

1988-ம் ஆண்டு பிரிவு ஐஎஃப்எஸ் அதிகாரியான குவாத்ரா கடந்த ஜனவரி 2020 முதல் காத்மண்டுவில் தூதராக இருந்து வருகிறார். குவாத்ராவை வெளியுறவுத் துறை புதிய செயலராக கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மத்திய அரசு நியமித்தது. இவருடைய நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.

இதற்கு முன்பு வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலராக குவாத்ரா இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.