மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிரத்தில் நக்சல்களுடன் மோதல்: காவலர் படுகாயம்

மகாராஷ்டிரத்தில் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்களுடன் நடைபெற்ற மோதலில் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்தார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :3 மே 2022, 8:21 am

DIN

மகாராஷ்டிரத்தில் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்களுடன் நடைபெற்ற மோதலில் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்தார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 900 கி.மீ தொலைவில் உள்ள பாம்ராகாட்டில் உள்ள டோட்ராஜ் வனப்பகுதிக்கு அருகே, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் பிரிவான சி-60 கமாண்டோக்கள் குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டது. 

வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். 

சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, நக்சல்கள் காட்டுக்குள் தப்பிச் சென்றதாக அதிகாரி கூறினார்.

இந்த மோதலில் காவலர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

பாம்ரகட் வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

கடந்தாண்டு நவம்பரில், கட்சிரோலியில் சி-60 கமாண்டோக்களுடன் நடந்த மோதலில் மூத்த பாதுகாப்புப் படை வீரர் மிலிந்த் டெல்டும்டே உள்பட 26 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.