மகாராஷ்டிரத்தில் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்களுடன் நடைபெற்ற மோதலில் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்தார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 900 கி.மீ தொலைவில் உள்ள பாம்ராகாட்டில் உள்ள டோட்ராஜ் வனப்பகுதிக்கு அருகே, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் பிரிவான சி-60 கமாண்டோக்கள் குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டது.
வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.
சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, நக்சல்கள் காட்டுக்குள் தப்பிச் சென்றதாக அதிகாரி கூறினார்.
இந்த மோதலில் காவலர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பாம்ரகட் வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கடந்தாண்டு நவம்பரில், கட்சிரோலியில் சி-60 கமாண்டோக்களுடன் நடந்த மோதலில் மூத்த பாதுகாப்புப் படை வீரர் மிலிந்த் டெல்டும்டே உள்பட 26 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


