தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரேஷனில் கோதுமைக்கு பதிலாக அரிசி: கூடுதல் 55 லட்சம் டன்னை ஒதுக்கியது மத்திய அரசு

கரோனா பாதிப்பு காலத்தில் இருந்து ரேஷனில் தொடங்கப்பட்ட 5 கிலோ இலவச கோதுமை திட்டத்தில், கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்க 55 லட்சம் டன் அரிசியை கூடுதலாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

News image
Updated On :4 மே 2022, 7:47 pm

DIN

கரோனா பாதிப்பு காலத்தில் இருந்து ரேஷனில் தொடங்கப்பட்ட 5 கிலோ இலவச கோதுமை திட்டத்தில், கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்க 55 லட்சம் டன் அரிசியை கூடுதலாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

எனினும், கோதுமை அதிகமாக பயன்படுத்தும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோதுமை விநியோகம் தொடரும் என்றும் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டும் முதல் தொடங்கப்படும் என்றும் மத்திய உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.4,800 கோடி கூடுதல் மானிய சுமை அரசுக்கு ஏற்படும்.

பொது விநியோக திட்டத்துக்கு கடந்த ஆண்டு 6 கோடி டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டும் இதே அளவு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போதைக்கு அரசிடம் சுமாா் 83 ஆயிரம் டன் அரிசி உபரியாக உள்ளது. ஆகையால், அடுத்த ஆண்டு தொடங்கப்படும் கோதுமைக்கு பதிலாக அரிசி விநியோகம் செய்யப்படும் திட்டத்துக்கும் கூடுதலாக 55 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழைய அரிசியைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன’ என்றாா்.

2022 மாா்ச் முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமாா் 80 கோடி பயனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ கோதுமை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பா் மாதம் வரையில் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோதுமையை விட அரிசிக்கான மானியத் தொகை கூடுதலாக வழங்கப்பட வேண்டியுள்ளதால், ரேஷனில் வழங்கப்படும் பொருள்களில் அரிசி குறிப்பிட்ட அளவில் வழங்கப்பட்டு வந்தது.

2024-ஆம் ஆண்டுக்குள் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தன்று பிரதமா் மோடி அறிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.