தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மக்களுக்காக போராடுபவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும்: ராகுல் காந்தி

மக்களுக்காக போராடுபவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்ததுள்ளார்.

News image

ராகுல் காந்தி

Updated On :7 மே 2022, 12:43 pm

DIN

ஹைதராபாத்: மக்களுக்காக போராடுபவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்ததுள்ளார்.

மக்கள் மத்தியில் இருந்துகொண்டு அவர்களுக்காகப் போராடுபவர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று ராகுல் காந்தி, தெலங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், மாநிலத் தலைவர்கள் தங்கள் குறைகளை ஊடகங்களுக்கு முன் கூற வேண்டாம் என்று எச்சரித்தார். மேலும் அந்தந்த தொகுதிகளுக்குச் சென்று களத்தில் பணியாற்றுமாறு வலியுறுத்தினார்.

தெலங்கானாவுக்கு தனது இரண்டு நாள் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, ஹைதராபாத்தில் உள்ள காந்தி பவனில் தெலங்கானா  காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ராகுல் உரையாற்றினார்.

வரும் தேர்தல் டி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேரடிப் போட்டியாக இருக்கும் என்று கூறிய அவர், தகுதியின் அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் உழைத்து, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், இளைஞர்களுக்காக போராடுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.