ஹைதராபாத்: மக்களுக்காக போராடுபவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்ததுள்ளார்.
மக்கள் மத்தியில் இருந்துகொண்டு அவர்களுக்காகப் போராடுபவர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று ராகுல் காந்தி, தெலங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார்.
ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், மாநிலத் தலைவர்கள் தங்கள் குறைகளை ஊடகங்களுக்கு முன் கூற வேண்டாம் என்று எச்சரித்தார். மேலும் அந்தந்த தொகுதிகளுக்குச் சென்று களத்தில் பணியாற்றுமாறு வலியுறுத்தினார்.
தெலங்கானாவுக்கு தனது இரண்டு நாள் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, ஹைதராபாத்தில் உள்ள காந்தி பவனில் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ராகுல் உரையாற்றினார்.
வரும் தேர்தல் டி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேரடிப் போட்டியாக இருக்கும் என்று கூறிய அவர், தகுதியின் அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் உழைத்து, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், இளைஞர்களுக்காக போராடுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வடக்கு: தவெக வெற்றி

மதுரை மத்திய தொகுதியில் தவெக வெற்றி

சீமான் அதிா்ச்சித் தோல்வி: 4 - ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்

புதுச்சேரி அமைச்சரவையில் பங்கு கேட்போம்! மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் பேட்டி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


