இந்தூரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில்,
இந்தூரில் உள்ள ஸ்வார்ன் பாக் காலனியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பலரின் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்துள்ளது என்று செய்தி கிடைத்தது. அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தூரில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.