நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் எங்களுடையது: பாஜக எம்.பி.

தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் ஜெய்ப்பூர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தது என பாஜக எம்.பி.யும் ஜெய்ப்பூர் ராஜ குடும்ப வாரிசுமான தியா குமாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 மே 2022, 10:30 pm IST


தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் ஜெய்ப்பூர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தது என பாஜக எம்.பி.யும் ஜெய்ப்பூர் ராஜ குடும்ப வாரிசுமான தியா குமாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹாலில் ஹிந்து சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய, அங்குள்ள 20 அறைகளைத் திறக்க இந்திய தொல்லியல் துறையை அறிவுறுத்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னௌ அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தது என பாஜக எம்.பி. தியா குமாரி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் தியா குமாரி கூறியதாவது:

"ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்திடமிருந்து ஷாஜகான் நிலத்தைக் கையகப்படுத்தியபோது, அவர்களால் அதை எதிர்க்க முடியவில்லை. காரணம், அப்போது அது ஷாஜகான் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஜெய்ப்பூர் ராஜ குடும்ப அறக்கட்டளையிடம் நிலத்துக்கான ஆவணங்கள் உள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டால் அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க ராஜ குடும்பம் தயார்.

இன்றைக்கும் அரசு நிலத்தைக் கையகப்படுத்தினால், அதற்குப் பதிலாக இழப்பீடு கொடுக்க வேண்டும். அப்போதும் சில இழப்பீடுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், ஷாஜகானுக்கு எதிராகவோ அல்லது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ எந்தவொரு சட்டமும் அப்போது கிடையாது.

தாஜ்மஹாலிலுள்ள கதவுகளைத் திறக்க யாரோ வலியுறுத்தியிருப்பது நல்ல விஷயம். அதன்மூலம் உண்மை வெளிவரட்டும். இந்த விவகாரம் குறித்து நாங்களும் தற்போது ஆராய்ந்து வருகிறோம்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.