மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குஜராத்தில் வாட்டி எடுக்கும் வெயில்: மயங்கி விழும் பறவைகள்

குஜராத் மாநிலத்தில் நிலவி வரும் வெப்ப அலைகளின் தாக்கத்தால் பறவைகள் மயங்கி விழுவது அதிகரித்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :12 மே 2022, 9:13 am IST

குஜராத் மாநிலத்தில் நிலவி வரும் வெப்ப அலைகளின் தாக்கத்தால் பறவைகள் மயங்கி விழுவது அதிகரித்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவைக் காட்டிலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரலில் அதிக வெப்பம் நிலவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா போன்ற வடமேற்கு, மத்திய மாநிலங்களில் மே மாதத்திலும் இயல்புநிலையைக் கடந்து கூடுதல் வெப்பநிலையை உணரப்பட்டு வருகிறது. 

இந்த கடுமையான வெப்பம் காரணமாக மனிதர்களைப் போன்றே விலங்கினங்களும், பறவைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நிலவும் வெயில் காரணமாக பறவைகள் மயங்கி விழுவது அதிகரித்து வருவதாக கால்நடை மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகளுக்கு வெப்ப அலை பாதிப்பிற்கு சிகிச்சை அளித்ததாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள் அவற்றில் புறாக்கள் மற்றும் கிளிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றுக்கு மத்தியில் குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் வெப்ப அலை தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க தனி சிகிச்சைபிரிவுகளை ஏற்படுத்துமாறு மாநில சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.