மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் பந்திப்போராவில் அரகம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 மே 2022, 1:41 pm

ஜம்மு காஷ்மீர் பந்திப்போராவில் அரகம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த என்கவுண்டர் குறித்து ஜம்மு காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான். இதன் மூலம் மொத்த பயங்கரவாதிகளின் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது என பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக காலையில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பந்திப்போராவின் அரகம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. கடந்த புதன் கிழமை இரு பிரிவினருக்கும் இடையே சலிந்தர் காட்டுப் பகுதியில் நடைபெற்ற  துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவன்  கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.