பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ராஜஸ்தான்: இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் புலி

ராஜஸ்தானில் சவாய் மதோபூர் மாவட்டத்தில் ரந்தம்போர் புலிகள் காப்பகத்தில் இறந்த நிலையில் பெண் புலி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:14 am

DIN

ராஜஸ்தானில் சவாய் மதோபூர் மாவட்டத்தில் ரந்தம்போர் புலிகள் காப்பகத்தில் இறந்த நிலையில் பெண் புலி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

டி-61 என்று அறியப்படும் அந்த பெண் புலியின் வயது 11 ஆகும். இந்த பெண் புலியின் உடலானது ரந்தம்போர் புலிகள் காப்பகத்தில் 7 வது மண்டலத்தில் கண்டுடெடுக்கப்பட்டது. பின்னர் அந்த பெண் புலியின் உடலானது ராஜ்பாக் வனப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது.

டி-61 புலியின் இறப்புக்கு முதன்மையான காரணம் மிக உயரத்திலிருந்து கீழே விழுந்ததுதான் என ரந்தம்போர் புலிகள் பாதுகாப்பக இயக்குநர் சேதுராம் யாதவ் தெரிவித்தார். ஆனால், உயிரிழப்புக்கான சரியான காரணம் என்ன என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் எனவும் தெரிவித்தார்.

டி-61 பெண் புலி குறித்து வன அதிகாரிகள் கூறியது, “ டி-61 புலியானது டி-8 (லட்லி)  மற்றும் டி-34 (கும்பா) ஆகியவைகளின் மகள். இந்த புலிகள் காப்பகத்தில் மண்டலம் 7 மற்றும் 8 ஆகிய இரு மண்டலங்களும் அதன் எல்லை. டி-61 புலி தனது அதிகபட்ச நேரத்தை டி-58 உடன் செலவிடும். இறந்த பெண் புலியின் இறுதி சடங்கு அதன் உடற்கூறு ஆய்விற்கு பின்னர் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும்” என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.