மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தில்லியில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து

தேசிய தலைநகர் தில்லியில் உள்ள கீர்த்தி நகர் பகுதியில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
கோப்புப் படம்
Updated On :13 மே 2022, 7:35 am

DIN

தேசிய தலைநகர் தில்லியில் உள்ள கீர்த்தி நகர் பகுதியில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேற்கு தில்லியில் உள்ள 7/16 கீர்த்தி நகர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மூன்று தொழிற்சாலைகளில் அதிகாலை 1.50 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிரிழப்பு, காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தில்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கார்க் உறுதிப்படுத்தினார். இருப்பினும் அதிகளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 

முதலில் துணிப்பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீப்பிடித்ததாகவும். பின்னர் மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும், மூன்றாவது கடினமான பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தீ பரவியதாக உயர் அதிகாரி தெரிவித்தார். 

தீ விபத்தை முழுமையாக அணைத்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.