வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மே 26-ஆம் தேதியுடன் பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள்

பிரதமராக மோடி பதவியேற்று மே 26-ஆம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

News image
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
Updated On :14 மே 2022, 7:07 pm

DIN

பிரதமராக மோடி பதவியேற்று மே 26-ஆம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அவா் ஹிமாசல பிரதேசத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அந்த மாநில பாஜக தலைவா் சுரேஷ் காஷ்யப் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஹிமாசல பிரதேசத்தை தனது இரண்டாவது வீடாக பிரதமா் மோடி கருதுகிறாா். அவா் பிரதமராகப் பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடையுள்ளதையொட்டி, மே 31-ஆம் தேதி ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லாவில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பிரதமா் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது. மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரும் விரைவில் ஹிமாசல பிரதேசம் வரவுள்ளனா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.