கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மராத்தி நடிகைக்கு மே 18ஆம் தேதி வரை போலீஸ் காவல்

மராத்தி நடிகை கேத்தகி சித்தலேவை மே 18ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :15 மே 2022, 1:23 pm

DIN

மராத்தி நடிகை கேத்தகி சித்தலேவை மே 18ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை மறைமுகமாகக் குறிப்பிட்டு இணையதளங்களில் வெளியிடப்பட்டிருந்த பதிவை நடிகை கேத்தகி சித்தலே பகிா்ந்திருந்தாா். ‘நரகம் காத்துக் கொண்டிருக்கிறது’ போன்ற வாசகங்கள் அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்தன. 

இந்நிலையில், சரத் பவாா் குறித்து அவதூறாகப் பதிவிட்ட நடிகை சித்தலேவை தாணே காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். அவர் மீது மொத்த 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே கைதான மராத்தி நடிகை கேத்தகி சித்தலேவை விடுமுறை கால நீதிமன்றத்தில் இன்று காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவரை மே 18ஆம் தேதி வரை தாணே போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக கேத்தகி சித்தலேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்தபோது வளாகத்தின் வெளியே அவருக்கு எதிராக சரத்பவார் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.