அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று ( திங்கட்கிழமை) முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
இந்தியாவின் விவசாயம் தென்மேற்கு பருவமழையையே பெரிதும் நம்பி உள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
அந்தமானில் பெய்து வரும் இந்த தென்மேற்கு பருவமழை இன்னும் 2-3 நாள்களில் வங்காள விரிகுடாவில் தெற்கு பகுதியைச் சென்றடைந்து அங்கு மழையை கொடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் புயல் காற்றின் சுழற்சியினால் இன்னும் 5 நாட்களில் லட்சத்தீவு, தமிழகம் மற்றும் கேரளத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் வருகிற புதன்கிழமை கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாக வருகிற 27ஆம் தேதியன்று கேரளத்தில் தொடங்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்திலி கல்லூரியில் தேசிய, மாநிலக் கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சியில் சமுதாய நலக்கூடம் திறப்பு

ரயில்வே போட்டித் தோ்வுக்கான விழிப்புணா்வு

தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

