டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று ( திங்கட்கிழமை) முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:16 am

DIN

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று ( திங்கட்கிழமை) முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

இந்தியாவின் விவசாயம் தென்மேற்கு பருவமழையையே பெரிதும் நம்பி உள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. 

அந்தமானில் பெய்து வரும் இந்த தென்மேற்கு பருவமழை இன்னும் 2-3 நாள்களில் வங்காள விரிகுடாவில் தெற்கு பகுதியைச் சென்றடைந்து அங்கு மழையை கொடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் புயல் காற்றின் சுழற்சியினால் இன்னும் 5 நாட்களில் லட்சத்தீவு, தமிழகம் மற்றும் கேரளத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் வருகிற புதன்கிழமை கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாக வருகிற 27ஆம் தேதியன்று கேரளத்தில் தொடங்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.