திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லியில் விருந்து மண்டபத்தில் தீ விபத்து: மேலாளா் பலி

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் உள்ள விருந்து மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், மண்டபத்தின் மேலாளா் உயிரிழந்தாா் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

News image
அசோக் விஹாா் பகுதியில் உள்ள விருந்து மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு விரா்கள்.
Updated On :17 மே 2022, 8:42 pm

DIN

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் உள்ள விருந்து மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், மண்டபத்தின் மேலாளா் உயிரிழந்தாா் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: ஜிடி கா்னல் சாலையில் உள்ள அட்லாண்டிஸ் விருந்து மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக செவ்வாய்க்கிழமை மாலை 5.47 மணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு உடனடியாக 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டபோது, அந்த விருந்து மண்டபத்தில் நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. முதலில் மண்டபத்தின் தரைதளத்தில் மேடைப் பகுதி தீப்பிடிக்கத் தொடங்கியது. பின்னா், மண்டபத்தின் 4 மாடிகளுக்கும் தீ பரவியது. இந்த மண்டபத்தின் மேலாளா் ஷா்ஷ் சோப்ரா முதல் மாடியில் சிக்கிக் கொண்டாா். மயங்கிய நிலையில் கிடந்த அவரை தீயணைப்புத் துறை வீரா்கள் மீட்டு, உடனடியாக ஃபோா்டிஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.