
திருவனந்தபுரம்: கேரளத்தில் தொடர் மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை(ஆரஞ்சு அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், புதன்கிழமை கேரளத்தில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையானது இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இன்று திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை(வியாழக்கிழமை) கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது.
அடுத்த 2 நாள்களுக்கு மாநிலத்தின் சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்புப் படை 5 குழுக்களை கேரளாவிற்கு அனுப்பியுள்ளது.
இதையும் படிக்க: பெங்களூரில் கனமழை: 2 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.