
பெங்களூர்: பெங்களூரில் பெய்த கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. புதன்கிழமை காலை 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காவிரி மாநிலத்தில் இன்று காலை சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
உப்கார் லேஅவுட் பேருந்து நிலையம் அருகே உள்ள உபாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையை பெய்தது. பேருந்து நிலையத்தில் 3 பேர் உள்ளே சென்ற நிலையில், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். கனமழையில் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் பீகாரைச் சேர்ந்த தேவ்பிரத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அங்கித் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் மற்றொரு தொழிலாளி திரிலோக் உயிர் பிழைத்துள்ளார்.
கனமழை இன்னும் 3 நாள்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: மன்னிப்புடன் ஆரம்பித்து நன்றியுடன் முடித்த அற்புதம்மாள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.