உயிர் எரிபொருள் சார்ந்த துறையில் சமீபக காலமாக ஏற்பட்டிருக்கும் அதிக அளவிலான முன்னேற்றத்தின் காரணமாக, நிரந்த குழு கொடுத்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய உயிர் எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழு முக்கிய முடிவினை எடுத்துள்ளது. அதன்படி, தேசிய உயிர் எரிபொருள் திட்டத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 1, 2023ஆம் ஆண்டு முதல் 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு நடைமுறைக்கு வரும் என சட்டத்திருத்தம் கொண்டுவரப் பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியானது.