மகாராஷ்டிரத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான சீரடி சாய்பாபா கோயிலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தால் ஆன பட்டையை நன்கொடையாக அளித்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோயில் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பாக்கியஸ்ரீ பனாயத் கூறுகையில்,
பாபாவின் பக்தரான பார்த்தசாரதி ரெட்டி கடந்த 2016-ம் ஆண்டில் சாய்பாபா சிலையின் சிம்மாசனத்திற்கான தங்கப் பட்டையை நன்கொடையாக வழங்க விரும்பினார். ஆனால் கரோனா தொற்று காரணமாக தாமதமானது.
அவர், இப்போது ரூ.2 கோடி மதிப்புள்ள நான்கு கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட தங்கப் பட்டையை ஸ்ரீ சாய்பாபாவின் சிம்மாசனத்திற்காக நன்கொடையாக அளித்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 94 கிலோ தங்க சிம்மாசனத்தை கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!
ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



