ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவருடைய தாயாா் இந்திராணி முகா்ஜிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.
தொழிலதிபா் இந்திராணி முகா்ஜியின் மகள் ஷீனா போரா கடந்த 2012-ஆம் ஆண்டு கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் இந்திராணி முகா்ஜி, அவருடைய மூன்றாவது கணவா் பீட்டா் முகா்ஜி ஆகியோா் கடந்த 2015-இல் கைது செய்யப்பட்டனா். இந்திராணி முகா்ஜி, மும்பை பைகுல்லா மகளிா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்திராணியின் ஜாமீன் மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திராணி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘வழக்கில் தொடா்புடைய பீட்டா் முகா்ஜிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது. இந்திராணி முகா்ஜி 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளாா். வழக்கில் 237 சாட்சிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 68 பேரிடம் மட்டுமே விசாரணை முடிந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை விரைவில் முடிவடையாது என்பதால் இந்திராணிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.
அதற்கு மறுப்பு தெரிவித்து சிபிஐ சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ‘வழக்கில் 50 சதவீத சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்போவதில்லை. வழக்கு விசாரணை விரைவில் முடிவடைந்துவிடும். முக்கிய நபரான ராகுல் முகா்ஜியிடம் மே 27-ஆம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது. எனவே, இந்திராணிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று வாதிட்டாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்திராணி முகா்ஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனா். தன் முதல் கணவருக்குப் பிறந்த மகள் ஷீனா போராவும் மூன்றாவது கணவரின் மகன் ராகுல் முகா்ஜியும் ஒன்றாக வாழ்ந்ததால் அதிருப்திக்குள்ளான இந்திராணி, ஷீனா போராவைக் கொலை செய்யும் சதித் திட்டத்துடன் கடத்தியிருப்பது தெளிவாகிறது. இருப்பினும் வழக்கில் தொடா்புடைய சாட்சிகளிடம் விரைவில் விசாரண முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் இந்திராணிக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.