தேமாஜி: அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தேமாஜி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களை அவர்களது பெற்றோர் படகில் அழைத்து வந்து விட்டுச் செல்கிறார்கள்.
விஷ்ணுபூர் பகுதியில் இயங்கி வரும் துவக்கப் பள்ளி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கூறுகையில், எங்கள் துவக்கப் பள்ளியில் சுமார் 29 மாணவர்கள் இருக்கிறார்கள். வெள்ளம் காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள். சில பெற்றோர் படகு மூலம் பிள்ளைகளை அழைத்து வந்து பள்ளியில் விட்டுவிட்டுச் செல்கிறார்கள் என்கிறார்.
அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக 29 மாவட்டங்களை சூழ்ந்துள்ள வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 1400 கிராமங்கள் நீருக்குள் மூழ்கியுள்ளன. நகோன் மாவட்டம் மிகவும் மோசமாக மாவட்டங்களில் முதன்மையானதாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


