மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆப்கனில் நிலச்சரிவு: இடிபாடுகளில் சிக்கி இருவர் பலி

ஆப்கானிஸ்தானின், வாராஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக மாகாண நிர்வாக செய்தித் தொடர்பாளர் சிபோர் சிகானி தெரிவித்தார்.

News image
Updated On :21 மே 2022, 11:36 am

ஆப்கானிஸ்தானின், மத்திய பாமியான் மாகாணத்தின் வாராஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக மாகாண நிர்வாக செய்தித் தொடர்பாளர் சிபோர் சிகானி சனிக்கிழமை தெரிவித்தார். 

அதிகாரியின் கூற்றுப்படி, 

வெள்ளிக்கிழமை பிற்பகல் வாராஸ் மாவட்டத்தில் உள்ள கஃப்தர் கான் கிராமத்தில் இயற்கை பேரழிவு ஏற்பட்டது. அப்போது சகோதரிகள் இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். முன்னதாக திங்களன்று, வடக்கு படக்ஷான் மாகாணத்தின் ஷோலார்-இ-பயான் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.