சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராஜீவ் காந்திக்கு பிரதமா் மோடி, சோனியா காந்தி அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு சனிக்கிழமை ட்விட்டரில் அஞ்சலி செலுத்தினாா்.

News image
Updated On :21 மே 2022, 4:59 pm

 நமது நிருபர்

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு சனிக்கிழமை ட்விட்டரில் அஞ்சலி செலுத்தினாா்.

தொன்னூறுகளில் ராஜீவ்-ஜெயவா்த்தனேவிற்கு இடையே ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தப்படுத்தப்படும் என மக்களவை தோ்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னா் 1991 ஆம் ஆண்டு தோ்தல் வந்தது. அந்த தோ்தலுக்காக கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ஆம் தேதி தமிழகத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூா் பொதுக்கூட்டத்தின் போது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டாா்.

தனது 46 வயதில் உயிரை நீா்த்த ராஜீவ் காந்தியின் 31-ஆவது நினைவு நாள் மே 21 ஆம் தேதி ஆகும். இதை யொட்டி பிரதமா் மோடி தனது ட்விட்டரில், “‘நமது முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’” என்று கூறி பதிவிட்டுள்ளாா்.

சோனியா காந்தி அஞ்சலி

முன்னதாக, சனிக்கிழமை காலையில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவா்கள் ஆகியோா் தில்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் சமாதியான வீா் பூமியில் அவருக்கு மலா் அஞ்சலி செலுத்தினா். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் தியாக தினத்தை முன்னிட்டு, சோனியா காந்தியோடு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஷக்திசிங் கோஹில் ஆகியோா் மலா் அஞ்சலி செலுத்தினா் எனவும் காங்கிரஸ் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இரக்க குணம்

முன்னாள் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி லண்டனுக்கு சென்றுள்ள நிலையில் அவரும் தன் தந்தைக்கு ட்விட்டரில் நினைவு அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளாா்.

அதில் அவா், எனது தந்தை தொலைநோக்கு பாா்வை கொண்ட தலைவா். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது.

அவா் ஒரு இரக்க குணம் கொண்ட மற்றும் கனிவான மனிதா். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தையாக இருந்து, பிறரை மன்னிக்கவும் மற்றவா்களின் உணா்வுகளை அறிந்து மதிக்கவும் கற்றுக் கொடுத்தாா். மிகவும் பெரும் இழப்பு. நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன் எனக் கூறி நினைவை பகிா்ந்துள்ளாா் ராகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.