சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரதமா் மோடி நாளை ஜப்பான் பயணம்:23 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்

‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் செல்லும் பிரதமா் நரேந்திர மோடி 23 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

News image
Updated On :21 மே 2022, 6:30 pm

DIN

‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் செல்லும் பிரதமா் நரேந்திர மோடி 23 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ‘க்வாட்’ கூட்டமைப்பின் 3-ஆவது உச்சி மாநாடு, டோக்கியாவில் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி 23-ஆம் தேதி ஜப்பான் செல்கிறாா். 2 நாள்கள் ஜப்பானில் தங்கியிருக்கும் அவா், 40 மணி நேரத்தில் 23 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:

பிரதமா் மோடி தனது பயணத்தின்போது, விமானத்தில் 2 இரவுகளைக் கழிக்கிறாா். டோக்கியாவில் ஓா் இரவு தங்குகிறாா்.

க்வாட் மாநாட்டின்போது, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறாா். இதுதவிர, ஜப்பானைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறாா்; இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சந்தித்து உரையாடவுள்ளாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமா் மோடியின் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகச் செயலா் வினய் மோகன் குவாத்ரா கூறியதாவது:

‘க்வாட்’ கூட்டமைப்பு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு வாய்ப்பாக ஜப்பான் மாநாடு அமைந்துள்ளது. இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியிலும், இந்தியாவின் எல்லைப் பகுதியிலும் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவா் இவ்வாறு கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.