வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அரவிந்த் கேஜரிவால், சந்திரசேகர ராவ் சந்திப்பு: பேசியது என்ன?

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினர்.

News image
சனிக்கிழமை சந்திப்பின்போது..
Updated On :22 மே 2022, 9:15 am

DIN


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சனிக்கிழமை தில்லி சென்றார். அவருடன் அமைச்சர் பிரசாந்த் ரெட்டி, எம்.பி.க்கள், எம்எல்ஏ உள்ளிட்டோர் தில்லி சென்றனர்.  சனிக்கிழமை அரவிந்த் கேஜரிவாலைச் சந்தித்தார் சந்திரசேகர ராவ்.

இதையடுத்து, இருவரும் தெற்கு மோதிபாக் பகுதியிலுள்ள சர்வோதயா பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். தில்லியிலுள்ள பள்ளி திட்டங்களை தெலங்கானாவுக்கும் எடுத்துச் செல்வதாக சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

இந்த நிலையில், இருவரும் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். சந்திப்பின்போது தேசிய அரசியல், கூட்டாட்சி, இந்தியாவின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கு, மத்திய அரசின் கொள்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.