அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிகார்: லாரி கவிழ்ந்து 8 பேர் பலி

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை குழாய்கள் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்ததில் 8 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :23 மே 2022, 5:43 am

DIN

பாட்னா: பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை குழாய்கள் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

சிலிகுரி-தில்லி தேசிய நெடுஞ்சாலை 57-ல் உள்ள ஜலால்கர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட காளி கோயில் அருகே அதிகாலை 3.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

பலியான 8 பேரும் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சில்லிகுரியில் இருந்து ஜம்மு & காஷ்மீர் செல்லும் வழியில் குழாய்கள் ஏற்றப்பட்ட சரக்கு லாரி  நான்கு வழிச்சாலையில் காளி கோயிலுக்கு வந்தபோது லாரி கவிழ்ந்தது. குழாய்கள் அவர்கள் மீது விழுந்ததில் 8 பேர் குழாய்களுக்கு அடியில் சிக்கி பலியாகினர்.

விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணியை துவக்கி, இறந்தவர்களின் உடல்களை மீட்கப்பட்டது. காயம் அடைந்தவர்களை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

விபத்திற்குப் பிறகு, ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.