6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெங்களூருவில் பல இடங்களில் 'சாரி' என எழுதிய மர்ம நபர்களை தேடும் காவலர்கள்

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் வளாகம் முழுவதும் சிவப்பு நிற பெயிண்டால் 'சாரி' என்று எழுதிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

News image
பெங்களூருவில் பல இடங்களில் 'சாரி' என எழுதிய மர்ம நபர்களை தேடும் காவலர்கள்
Updated On :25 மே 2022, 12:14 pm

DIN


பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் வளாகம் முழுவதும் சிவப்பு நிற பெயிண்டால் 'சாரி' என்று எழுதிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பெங்களூருவின் சன்கடகட்டே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் முழுவதும் சாரி என எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த பொதுமக்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இது குறித்து யாரும் புகார் தெரிவிக்காத நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இதில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஓரிடத்தில் இருந்த சிசிடிவி காட்சியில், இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வருகிறார்கள். உணவு விநியோகம் செய்யும் நபர்கள் வைத்திருப்பதைப் போன்ற பெரிய பையிலிருந்து அவர்கள் ஒரு பக்கெட்டை எடுத்து, சாரி என்று எழுதுவது பதிவாகியிருக்கிறது.

இந்த நபர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.