ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
ஒடிசாவின் கந்தமால் மற்றும் கஞ்சம் மாவட்டங்களின் எல்லையில் உள்ள கலிங்ககாட் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து கவிழ்ந்ததில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 6 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.40 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் கஞ்சத்தில் உள்ள துர்காபிரசாத் கிராமத்திற்கு அருகே நள்ளிரவில் நடந்ததாகவும், காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த ஒரு பயங்கரமான விபத்தில் உயிர் இழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இந்த சோகமான நேரத்தில், பலியான நபர்களின் குடும்பங்களுக்கு கடவுள் வலிமை தரட்டும் என்றார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் இருந்து ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


