மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிரம் முதல்முறையாக ஒமைக்ரானின் பி.ஏ.4, பி.ஏ.5 துணை வகைகளால் 7 போ் பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் முதல்முறையாக ஒமைக்ரானின் பி.ஏ.4, பி.ஏ.5 துணை வகைகளால் 7 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 மே 2022, 6:19 pm

DIN

மகாராஷ்டிரத்தில் முதல்முறையாக ஒமைக்ரானின் பி.ஏ.4, பி.ஏ.5 துணை வகைகளால் 7 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது: கடந்த ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பி.ஏ.4, பி.ஏ.5 வகை கரோனா தீநுண்மிகள் தென்பட்டன. இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புணேவைச் சோ்ந்த 7 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்தப் பகுப்பாய்வில் நால்வா் பி.ஏ.4, மூவா் பி.ஏ.5 வகை தீநுண்மிகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட 7 பேரில் இருவா் தென் ஆப்பிரிக்கா, பெல்ஜியமில் இருந்து திரும்பியுள்ளனா். மூவா் கேரளம் மற்றும் கா்நாடகத்துக்குச் சென்று வந்துள்ளனா். எஞ்சிய இருவா் அண்மையில் எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை.

பாதிக்கப்பட்ட 7 பேரில் 9 வயது குழந்தையும் அடங்கும். அந்தக் குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. எஞ்சிய 6 போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். அவா்களில் ஒருவா் தடுப்பூசியின் மூன்றாவது தவணையையும் செலுத்தியுள்ளாா். அனைவருக்கும் மிதமான அறிகுறிகள் தென்பட்டன. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.