மும்பை பள்ளியில் தீ விபத்து: 3 பேர் காயம்

மும்பை தாதர் பகுதியில் உள்ள பள்ளியின் சமையலறையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மும்பை தாதர் பகுதியில் உள்ள பள்ளியின் சமையலறையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இன்று காலை 5.21 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. சமையலறையில் மின்சார வையரிங், சிலிண்டர், சமையல் பொருள்கள் மற்றும் துணிகள் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. 

மேலும், இரண்டாவது தளத்தின் மேற்கூரையின் சில பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் சியோன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

பொதுமக்கள் மின்சாரத்தைத் துண்டித்த பின்னர், சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு கருவிகள் மற்றும் இரண்டு மோட்டார் பம்புகளின் குழாய் மூலம் தீயை அணைத்தனர். 

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காயமடைந்து மூவரும் சிகிச்சை பெற்று வருவதாக சியோன் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com