மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஓய்வூதியம் பெறுவோருக்கு எண்ம வாழ்நாள் சான்றிதழ்: விழிப்புணர்வு தொடக்கம்

ஓய்வூதியம் பெறுவோர் எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

News image
ஓய்வூதியம் பெறுவோருக்கு எண்ம வாழ்நாள் சான்றிதழ்: விழிப்புணர்வு தொடக்கம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:44 am

DIN


ஓய்வூதியம் பெறுவோர் எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

மத்திய ஓய்வூதியத் துறை, எண்ம வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை குறித்து நாடு முழுவதும் நவம்பர் மாதம் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறது.

இந்த திட்டத்தால், ஒருவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒரு முறை, ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி முன்பு நேரிடையாக தங்களது வாழ்நாள் சான்றிதழை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இதற்காக, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர், எந்த ஸ்மார்ட்ஃபோன் மூலமாகவும் நேரடியாக வராமல், எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழை அனுப்ப இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.