ஓய்வூதியம் பெறுவோருக்கு எண்ம வாழ்நாள் சான்றிதழ்: விழிப்புணர்வு தொடக்கம்

ஓய்வூதியம் பெறுவோர் எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.
ஓய்வூதியம் பெறுவோருக்கு எண்ம வாழ்நாள் சான்றிதழ்: விழிப்புணர்வு தொடக்கம்
ஓய்வூதியம் பெறுவோருக்கு எண்ம வாழ்நாள் சான்றிதழ்: விழிப்புணர்வு தொடக்கம்
Published on
Updated on
1 min read


ஓய்வூதியம் பெறுவோர் எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

மத்திய ஓய்வூதியத் துறை, எண்ம வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை குறித்து நாடு முழுவதும் நவம்பர் மாதம் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறது.

இந்த திட்டத்தால், ஒருவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒரு முறை, ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி முன்பு நேரிடையாக தங்களது வாழ்நாள் சான்றிதழை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இதற்காக, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர், எந்த ஸ்மார்ட்ஃபோன் மூலமாகவும் நேரடியாக வராமல், எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழை அனுப்ப இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com