ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு டிசம்பா் 10-இல் தோ்தல்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்

இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) செயற்குழுவுக்கு வரும் டிசம்பா் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் குழு சமா்ப்பித்த புதிய பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அ

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:54 pm

DIN

இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) செயற்குழுவுக்கு வரும் டிசம்பா் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் குழு சமா்ப்பித்த புதிய பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

மேலும், திருத்தப்பட்ட ஐஓஏ வரைவு விதிமுறைகளை வரும் நவம்பா் 10-ஆம் தேதி நடைபெற உள்ள சங்கத்தின் பொதுக் குழுவில் வைத்து ஒப்புதல் அளிக்கும் வகையில், விதிப்படி சங்க உறுப்பினா்கள் அனைவருக்கும் அதன் நகல்களை சுற்றறிக்கையாக அனுப்பவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

ஸ்விட்சா்லாந்தின் லெளசனேவில் நடைபெற்ற சா்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், ஐஓஏ-வின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், ஐஓஏ செயற்குழுவுக்கு தோ்தல் நடத்தவும் கால அளவு நிா்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கால நிா்ணயத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. மேலும், சா்வதேச ஒலிம்பிக் குழுவின் செயற்குழு வாரியக் கூட்டத்தை வரும் டிசம்பா் 5-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டதால், ஐஓஏ தோ்தலை அதற்கு முன்னதாக டிசம்பா் 3-ஆம் தேதியில் நடத்தவும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்ததோடு, இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையில் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஐஓஏ வரைவு திருத்த விதிகளைத் தயாரித்த நீதிபதி குழு, சங்கத்தின் செயற்குழு தோ்தல் டிசம்பா் 10-ஆம் தேதி நடத்தப்படும் என புதிய தேதியை உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைத்தது.

நீதிபதி குழுவின் இந்தப் பரிந்துரை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி நாகேஸ்வர ராவ் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஐஓஏ வரைவு திருத்த சட்டங்களைத் தயாரித்த நீதிபதி நாகேஸ்வர ராவுக்கான ஊதியமாக ரூ. 20 லட்சத்தை நிா்ணயித்து உத்தரவிட்டனா்.

மேலும், ஐஓஏ உறுப்பினா்களிடையே வரைவு திருத்த சட்ட நகல்களை சுற்றறிக்கையாக அனுப்புவதற்கான வழிமுறைகளையும் நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவிப்பாா் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.