புது தில்லி: புது தில்லியில் காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் தில்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம் மேம்படும்வரை தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டத்தால் தில்லி காற்றுமாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், புது தில்லியில் மீண்டும் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகனப் பதிவெண் முறையில் வாகனங்களை இயக்க அனுமதிப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக நாளை முதல் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கான வெளிப்புற செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.