பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கேஜிஎஃப் 2 பாடல் விவகாரம்: ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்கு

கேஜிஎஃப் 2 பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :5 நவம்பர் 2022, 12:48 pm

DIN

கேஜிஎஃப் 2 பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். செல்லும் வழியில் எல்லாம் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் இளைஞர்கள், குழந்தைகளையும் சந்தித்து உரையாடி வருகிறார். 

தற்போது அவர் தெலங்கானா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ராகுல்காந்தியின் கர்நாடக மாநில நடைப்பயணத்தின்போது அவரது யாத்திரை தொடர்பான விடியோ ப்ரோமோஷன்களுக்காக கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் பாடல் இசையை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. 

மேலும் இதுதொடர்பாக கேஜிஎஃப் உரிமம் பெற்ற இசை நிறுவனம் பெங்களூரு போலீஸில் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.